Tuesday, May 7, 2024

ஒரு பெண்மணியிடம் திட்டு வாங்கிய யோகி பாபு! இனி இப்படி இருக்கமாட்டேன் என சபதம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யோகிபாபு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்.அவர் கதாநாயகனாகவும் உருவெடுத்து சில படங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் பெரியதிரைக்கு வந்து தனி திறமையால் ஜொலித்தவர்.

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடனான காமெடி கவுண்ட்டர்கள் ஹிட் ஆகின.

இந்நிலையில் யோகிபாபு பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர் ஒரு மேடையில் பேசிய போது , ஒரு படத்தின் பாடல் காட்சியில் நான் நடனமாட ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன் பிறகு அந்த பாடலுக்கான ஷூட்டிங் இரவு நேரத்தில் அந்த ஷூட்டிங் நடந்த போது நான் சரியாக ஆடவில்லை.

அப்போது எனக்கு பின்னால் ஆடிய ஒரு பெண், ‘எனக்கு நெஞ்சு வலிக்குது. இவன் சரியா ஆடி தொலைக்க மாட்டேங்குறானே என புலம்பி கொண்டிருந்தார். அது என் காதில் விழுந்தது‌ அப்போது முடிவு செய்தேன் இனிமேல் நாம் யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நடனம் ஆடுவதை இப்போதெல்லாம் தவிர்த்துவிடுகிறேன்’ என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News