Wednesday, May 8, 2024

நயன்தாரா என்கிட்ட பேசவே இல்லை… நான் ஒதுக்கப்பட்டேன்… பில்லா படம் குறித்து மனம் திறந்த நமீதா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ஹாய் மச்சான்ஸ் என்று இளைஞர்களின் தூக்கத்தை கொள்ளை கொண்டவர் நடிகை நமீதா. தனது அழகாலும், அதீத கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்த நமீதா தற்போது அஜித் நடித்த பில்லா படத்தின் அனுபவத்தை ஒரு பழைய பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அதில், பில்லா படத்தில் நானும் நயன்தாராவும் சேர்ந்துதான் ஒன்றாக நடித்து இருந்தாலும் நயன்தாராவுடன் நான் பேசியது குறைவுதான் என்றும் மற்ற நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் யாரிடமும் பேசுவதில்லை என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, எனது காட்சிகளில் நான் நடிப்பேன். அவர் காட்சியில் அவர் நடிப்பார் அவ்வளவு தான்.நாங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த காட்சியில் கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை.பேசாமல் இருப்பது தான் நமீதா அணுகுமுறை என்று அனைவரும் நினைத்தார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் அப்படி இல்லை உண்மையில் நான் அங்கே ஒதுக்கப்பட்டு இருந்தேன் என்றார்.இப்படியிருந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் புத்தகங்களைப் படித்து கொண்டு இருப்பேன் என்றுள்ளார்.

நான் நடித்த நிறைய காட்சிகள் பில்லா படத்தில் இடம் பெறவே இல்லை .அப்படத்தை பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.பில்லா படத்தின் ஒரு காட்சியில் பாலத்தின் மேல் அஜித் நின்று கொண்டு இருப்பார்.அந்த ஒரு காட்சி படத்திற்கு முக்கியமான காட்சியாகும். அந்த காட்சியில் எனக்கு எந்த வசனமும் இல்லை உங்கள் கண்கள் தான் பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார் என்று நமீதா அந்த பேட்டியில் பில்லா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நமீதா.

- Advertisement -

Read more

Local News