Tuesday, May 7, 2024

அந்த காலத்திலேயே தனி விமானம் வைத்திருந்த நடிகை! யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போதைய தமிழ் சினிமா உலகில் கதாநாயாகிகளில் நயன்தாரா சொந்தமாய் விமானம் வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி 10 முதல் 12 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார். அது போக தனியாக தொழில் தொடங்கி, சமூக வலைத்தளம் என பல வழிகளில் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

ஆனால் 60 முதல் 70 கால கட்டங்களில் நயன்தாராவுக்கே சவால் விடும் அளவில் ஒரு ஹீரோயின் சம்பாதித்து இருக்கிறார். ஒரே நாளில் மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வந்துள்ளார். எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 500க்கு மேல் படத்தில் நடித்திருக்கிறார்.

எம்ஜிஆர் சிவாஜியை காட்டிலும் முதல் முதலாக தனி விமானம் சொந்தமாக வாங்கிய முதல் நடிகை இவர்தான். சூட்டிங் செல்வதற்காக அந்த விமானத்தை பயன்படுத்தி வந்தார். ஒரே நாட்களில் நான்கு படங்கள் என்றால் அந்த இடத்திற்கு எளிதாக செல்வதற்கு இந்த விமானத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

இவர் 1948 இல் பிறந்தவர் தனது 15 வது வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்கு நிகராக ஏன் அவர்களுக்குய் மேல் அதிகம் சம்பாதித்த நடிகை இவர்தானாம்.புன்னகை அரசி என அனைவராலும் அழைக்கப்படும் திரைப்பிரபலம் கே ஆர் விஜயா.

தனது 15 வயதில் கற்பகம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். தமிழ் சினிமாவில் 70 களில் வலம் வந்தார்.1963ல் நடிக்க வந்தவருக்கு இன்று 75 வயதாகிறது. அவ்வப்போது தமிழ் சீரியல்களிலும் தலைகாட்டி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News