Tuesday, May 7, 2024

அட்லி இப்படி பண்ணிட்டாரே’ என புலம்பிய கவின் பட இயக்குனரின் தந்தை…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலிவுட்டில் ராஜராணியில் தொடங்கிய இயக்குனர் அட்லீயின் திரைப்பயணம் ஜவான் படம் மூலம் பாலிவுட் வரை நீண்டுள்ளது.இவரின் தற்போதைய சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றும். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ. அதன் பிறகு விஜய்யுடன் கூட்டணி போட்டு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார்.

பின்னர் பாலிவுட் பறந்த அட்லி ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுக்கு மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்தார்.இதன் மூலம் அவரது சம்பளம் மளமளவென உயர்ந்தது. நடிகர் ஒருவர் கூறியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வருகின்ற மே பத்தாம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இயக்குனர் இளன். இவரின் தந்தையும் ஒரு நடிகர் தான்.இவர் சமீபத்தில் அட்லியை பற்றி கூறியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.பல படங்களில் நடித்த பாண்டியன் அட்லியின் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார்.இது குறித்து சமீபத்தில் பேசியிருந்தார்.

ஒருமுறை ஏ வெங்கடேஷ் மலேசியாவில் ஒரு சூட்டிங்காக 75 ஆயிரம் சம்பளத்திற்கு பாண்டியனை அழைத்திருக்கிறார்.ஆனால் அட்லீயை கூப்பிட அந்த படத்தில் ஜெய், நயன்தாரா போன்ற பெரிய பிரபலங்கள் நடிப்பதால் அந்த படத்திற்கு சென்று விட்டாராம். கடைசியில் அங்கு 3000 தான் சம்பளம் கொடுத்தார்களாம்.

பின்னர் அட்லீ இடம் சென்ற பாண்டியன் தனக்கு வேறொரு படத்தில் 75,000 சம்பளம் கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள் ஆனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தான் இந்த படத்தில் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார். அப்படியா இவருக்கு இன்னும் 500 ரூபாய் சேர்த்து கொடுங்க என்று அட்லீ கூறியிருக்கிறார்.

இப்படி ராஜா ராணி படத்திற்கு தனக்கு மொத்தமாக 3500 கிடைத்தது. அப்போது கேசியரிடம் சென்ற போது இப்போது வேண்டுமானால் உங்களது சம்பளம் இதுவாக இருக்கலாம் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு உங்கள் சம்பளத்தின் பக்கத்தில் இன்னும் ஒரு ஜீரோ இருக்கும் என்று சொன்னார். அதேபோல் தற்போது நடந்தது என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News