Friday, May 10, 2024

பாகுபலி 3 கண்டிப்பாக வரும்… இயக்குநர் ராஜமௌலி கொடுத்த அந்த அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மலையாளம் கன்னடம் என பல இந்திய மொழிகளில் 2015 -ம் ஆண்டில் வெளியானது ‘பாகுபலி’. இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கினார். இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து பட்டைய கிளப்பி இருந்தார்கள்.

இப்படத்தை முப்பரிமாண 3-டி தொழில் நுட்பத்தில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பாகுபலி படம் எடுக்கப்பட்டது.இந்திய திரைப் படங்களில் பாகுபலி’ படத்தின் 2 பாகங்களும் உலக அளவில் சுமார் ரூ. 2000 கோடி வசூல் பெற்று சாதனை படைத்தன.ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் மிரள வைத்தது என்றால் அது மிகையாகாது.

அதுமட்டுமின்றி இப்படம் தமிழ் ,இந்தி, மலையாளம் மொழிகளிலும் ‘டப்பிங்’ செய்யப்பட்டு ஒரேநேரத்தில் ரிலீஸ் ஆனது. இதற்கு பின்னர் வெளியான ‘பாகுபலி 2 ‘ படமும் வசூல் சாதனை படைத்தது. வெளிநாடுகளிலும் இப்படம் ‘டப்பிங்’செய்யப்பட்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை மலைப்போல் குவித்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் 3 – ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதை இயக்குனர் ராஜமவுலி. உறுதி செய்துள்ளார்.பாகுபலியை உருவாக்கிய நகரம் என்பதால், ஐதராபாத் எனது இதயத்தில் தனியான இடத்தை பிடித்துள்ளது என்றார்.

நம் ‌தென்னிந்திய சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ‘பாகுபலி’க்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு எனவும் பாகுபலி 3’ பாகம் கண்டிப்பாக விரைவில் உருவாகும் என்றுள்ளார்.இதுகுறித்து தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News