Friday, May 10, 2024

ராஷ்மிகாவை சல்மான் கானுக்கு கதாநாயகியாக ஆக்கிய ஏ.ஆர் முருகதாஸ்! பாலிவுட்டில் மாஸ் காட்டும் ராஷ்மிகா மந்தானா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் அறிமுகமானார் பின்னர் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய நிலையில், தற்போது பாலிவுட்க்கு பறந்துள்ளார். முன்னாதக ரன்பீர் கபூர் உடன் இணைந்து கடந்த ஆண்டு அனிமல் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அதேசமயம் மிகவும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. அப்படத்தில் மீண்டும் ராஷ்மிகாவை ஸ்ரீவள்ளியாக காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என கூறலாம்..

அதேபோல் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அவரது கைவசம் அடுத்தடுத்து அதிக பட வாய்ப்புகள் உள்ளன.இந்தி பட வாய்ப்புகளை எளிதாக தட்டி பறித்து வருகிறார் ராஷ்மிகா.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா.அவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News