Saturday, May 11, 2024

புஷ்பா படம் எனக்கு எந்த விதத்திலயும் உதவல… அவர் கேட்டதால மட்டும் தான் நடிச்சேன் – ஃபகத் பாசில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமா மட்டுமின்றி பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகர் ஃபகத் பாசில். தொடக்கத்தில் சில சறுக்கல்களை சந்தித்து பின்னர் அவரது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்ட்டாக கோல் போடும் திறமை கொண்ட ஃபகத் கடைசியாக ஆவேசம் படத்தில் அருமையாக நடித்திருந்தார் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 50 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை குவித்தது.

இயக்குனர் சுகுமார் அவர் புஷ்பா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை காந்தமாக கவர்ந்தது. அதைதொடர்ந்து வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

இதிலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.இந்த சமயத்தில் புஷ்பா படம் குறித்து ஃபகத் பாசில் அவரது கருத்துக்களை தெரிவித்துள்ளார் ‌.

அவர் அளித்த பேட்டியில், “புஷ்பா படம் என்னை பான் இந்தியா நடிகராக உயர்த்திக்கொள்ள எல்லாம் உதவியாக இருக்கவில்லை.இதில் மறைத்து பேச ஒன்றும் இல்லை. அந்தப் படத்தில் நான் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு காரணமே இயக்குநர் சுகுமார்தான். அவர் மீதான அன்பால்தான் அதில் நடிக்க சம்மதித்தேன்.புஷ்பா என்னை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போகவெல்லாம் இல்லை. இதுகுறித்து நான் சுகுமாரிடமே பேசியிருக்கிறேன் என்று ஓபனாக பேசியுள்ளார் ஃபகத் பாசில்.

- Advertisement -

Read more

Local News