Friday, May 10, 2024

பத்ம பூசன் விருது பெற்ற விஜயகாந்த்… பாடல் பாடி தனது வாழ்த்தை சொன்ன சத்தியராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகரும், தேமுதிகவின் நிறுவனருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நல குறைபாட்டால் காலமானார். இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்தது.நேற்று அந்த பத்மபூஷன் விருது விஜயகாந்துக்கு வழங்கப்பட்டது.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சத்தியராஜ், விஜயகாந்த்க்கு கிடைத்த இந்த விருதுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

சத்தியராஜ் வெளியிட்ட வீடியோவில், விஜயகாந்தின் குடும்பம், விஜயகாந்தின் தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் எண்ணற்ற ரசிகர்களுக்கு இந்த விருது ஒரு பெருமையாகும் என்று தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தினார்.

மேலும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, எம்.ஜி.ஆர் அவர்களின் புரட்சிகரமான பாடலான இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்… இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்று பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News