ஒரு காலத்தில் நடிகர் அப்பாஸ் 90களில் சாக்லேட் பாய் பெண்களின் கனவு கண்ணன் என்ற அடையாளங்களோடு வலம் வந்தவர்.இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான மாபெரும் வெற்றி படமான காதல் தேசம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே ஹிட்டடிக்க ஒரு காலகட்டத்தில் கால் சீட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு ஒரே நாளில் நான்கு ஐந்து படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் தேசம் படத்தையும், இந்த படத்தின் பாடல்களையும் இன்றைய இளம் தலைமுறையினரும் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.அந்தளவுக்கு இப்படமும் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தது.பின்னர் சினிமாவில் உச்சத்தில் இருந்து ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகி விட்டார் அப்பாஸ்.
இங்கு நடிகராஇ வலம் வந்த அவர் அங்கு என்ன செய்வது என்று தெரியாமல பைக் மெகானிக்காக வேலை, கழிவறை சுத்தம் செய்ததாக, நேரம் கிடைக்கும் போது, டாக்சி டிரைவராக மற்றும் பெட்ரோல் பங்க்கிலும் பணியாற்றியதா பேட்டி ஒன்றில் கூறியிருந்தது அனைவரிடமும் சோகத்தையும் ஏற்படுத்தியது.அவரின் அந்த பேட்டி மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
லேட்டஸ்டாக நடிகர் அப்பாஸ் அவரின் மனைவி, மகள், மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவில் அப்பாஸின் மகள் எமிரா, அப்பாஸ் அவர்களை போலவே செம க்யூடாக இருக்கிறார் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஹீரோயினி மாதிரி இருக்காங்ளே என கமெண்ட் செய்தும் அழகை போற்றியும் வருகின்றனர்.