Monday, April 29, 2024

மலையாளத்தில் கால் பதிக்கும் நடிப்பின் அரக்கன்… யாரோடு இணைகிறார் பாருங்க…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆவதற்கு முன்பு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா.நடிப்பின் அரக்கன் என்றளவிற்கு பெயர் எடுத்தவர் இவர். கடைசியாக மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக அமைந்தது இவருடைய நடிப்பு.‌அதேசமயம்‌ இவர் நடித்த இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

தனது முதல் படமாக அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்காக ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்தப் படத்தின் மேக்கிங் மற்றும் கதையில் எஸ்.ஜே.சூர்யா அயராத உழைப்பை போட்டதாலா படம் மெகா ஹிட்டானது.பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்க குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கவனிக்க வேண்டிய இயக்குநராக மாறினார்.

அந்தப் படத்துக்காக முதல்முறையாக அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் அவருடைய உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கும் புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தான் தெரியவந்தது.இப்படி நல்லுள்ளம் கொண்ட நல்ல இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு பலரும் பாராட்டுகளை குவித்தனர்.நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இறைவி படத்தில் தொடங்கிய அவரது அசுர நடிப்பு கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள்வரை நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மலையாள திரையுலகிலும் கால்பதிக்க போகிறார்.மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.இப்படத்தில் ஃபகத் பாசிலும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News