Thursday, May 2, 2024

வெங்கட் பிரபுவிடம் இருந்து நழுவிக் கொண்ட சிவகார்த்திகேயன்? நட்புக்கே முன்னுரிமை…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தக் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தை சத்தியஜோதி நிறுவனம் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க தயாராக இருந்தது.

இதைப்பற்றி மீண்டும் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம் பேசிய போது, அந்தக் கதை வேண்டாம், வேறு ஏதாவது கதையைத் தயார் செய்து வாருங்கள் என்று சிவகார்த்திகேயன் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதைக் கேட்டதும் வெங்கட் பிரபுவுக்கு எதுவுமே புரியவில்லை.

இப்படி திட்டமிட்டபடி நடக்காமல் போனதால் வெங்கட் பிரபு கவலைப்பட்டு, எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் அவரது நண்பரான சிபி சக்கரவர்த்தி இருப்பார் என்று கூறப்படுகிறது.

காரணம் சிபி சக்கரவர்த்திக்கு தற்போது வேறு எந்த பட வாய்ப்பும் இல்லை. எனவே அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கலாம் என்பதால் தான் வெங்கட் பிரபுவை வேண்டாம் என்று சிவா கார்த்திகேயன் கூறியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News