Thursday, May 2, 2024

மீண்டும் கிராமத்து கெட்டப்பில் விஷால்! பட்டையை கிளப்ப இணைய போகும் மருது கூட்டணி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகிய பிறகு ரசிகர்களிடம் கலவையான பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களில் இருந்த விஷால் மீண்டும் திரும்பி வரவிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விஷாலின் படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், ரத்னம் படம் அவருக்கு உத்வேகத்தைத் தந்துள்ளது. மிஸ்கின் விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டதால், விஷால் தனியாக இந்தப் படத்தை இயக்குவதாகக் கூறினார். இப்போது, துப்பறிவாளன் 2க்குப் பிறகு விஷாலின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.

கிராமப்புற படங்களைப் பொறுத்தவரை இயக்குநர் முத்தையா பட்டையை கிளப்புவார் . கொம்பன், விருமன் போன்ற படங்களை இயக்கி அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும், ஏற்கனவே விஷாலுடன் இணைந்து மருது என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது, மீண்டும் அதே கூட்டணி இணையப் போகிறது. இந்தப் புதிய படம் கிராமப்புற சூழலில் எடுக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இந்தப் படம் பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்டது. அடுத்ததாக, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் முத்தையா.

- Advertisement -

Read more

Local News