Monday, May 27, 2024

‘வாடிவாசல்’ படத்தை முதலில் இவர் தான் இயக்கவிருந்தாராம் … வசந்தபாலன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியாகியவுடன், ரசிகர்கள் அந்த படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தனர். படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்குவதில் பிஸியானர்.

அதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காளைகளை அழைத்து டெஸ்ட் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இதில் நடிகர் சூர்யா, டாணாக்காரன் இயக்குநர் மற்றும் நடிகர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் முடிந்தாலும், படத்தின் முக்கிய ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

வெற்றிமாறன், விடுதலை படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் வெற்றி விடுதலை படத்தில் பிஸியாக, சூர்யா கங்குவாவில் பிஸியாகியதால், வாடிவாசல் படத்தின் பணிகள் தள்ளிப்போய் கொண்டே‌ இருக்கின்றன.

இந்த நிலையில், வாடிவாசல் படம் குறித்து வசந்தபாலன் ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்தார். முதலில், அந்த படத்தை சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கவிருந்தார், ஆனால் சில காரணங்களால் அந்த முடிவு கைவிடப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், தானும் அந்த படத்தை இயக்க விரும்பியதாக கூறினார். லிங்குசாமி சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கியபோது, அது எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் ஏமாற்றம் அளித்தது என்பது‌ குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News