Monday, April 29, 2024

நடிக்க மறுத்த ஜோதிகா… ஆர்டர் போட்ட சூர்யா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலிவுட்டின் மிகவும் விரும்பகூடிய ஜோடி என்றால் அது முதலில் சூர்யா ஜோதிகாவக தான் இருப்பார்கள். பல ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர். தற்போது மும்பையில் வசித்தும், சினிமாக்களில் நடித்தும் வருகின்றனர். ஜோதிகாவுக்கு சூர்யா மிகப்பெரிய ஆதரவாக உள்ளார். இந்நிலையில், ஜோதிகா விரைவில் வெளியாகவிருக்கும் பாலிவுட் படமான ஸ்ரீகாந்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் இயக்குநர் ஜோதிகாவை பற்றி அளித்த பேட்டி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

கங்குவா படம் பல மொழிகளில் உருவாகிறது. இது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் படம். இதில் திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஜோதிகா தற்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் ஸ்ரீகாந்த் ஃபெல்லா என்பவரின் வாழ்க்கையையே இந்தப் படத்தின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் படத்தின் இயக்குநர் துஷார் ஹிராநந்தனி ஜோதிகா குறித்து ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜோதிகா மிகச்சிறந்த நடிகை. ஸ்ரீகாந்த் படத்தில் நடிப்பதற்கு முதலில் அவருக்கு ஆர்வமே இல்லை. ஆனால், சூர்யா அந்தப் படத்தின் திட்டக்குழுவைப் படித்து, ஜோதிகாவிடம் நீ இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் ஜோதிகா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்றார்.

- Advertisement -

Read more

Local News