நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான இந்தி வெப் சீரிஸ் தி ஃபேமிலி மேன் 2-ல் நடித்து, பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்தியில் பல படங்களில் நடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல தென்னிந்திய நடிகைகள் இந்திப் படங்களில் நடித்து வரும் நிலையில், இன்னும் சமந்தாவுக்கு ஒரு வெப் சீரிஸ் மற்றும் ஒரு படத்தை தவிர வேறு எந்த பட வாய்ப்பும் பெரிதாக கிடைத்ததாக தெரியவில்லை.
நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு ‘பங்காரம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அட்டகாசமான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் கார்ட்டூன் படத்தில் இருப்பது போல் சமந்தா இருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த போஸ்டரில் சமந்தா நடிக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும், இயக்குநரின் பெயரும் அறிவிக்கப்படவில்லை. டிராலாலா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பங்காரம்’ என்று மட்டுமே போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெருங்கி பார்த்தால் சமந்தா போல் தெரிவதில்லை என்றும் துஷாரா விஜயன் போல் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமந்தாவின் ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் கூட அவரை சும்மா விடமாட்டீர்களா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சமந்தா மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளதால், இந்தப் படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சிட்டாடல் படத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.