Monday, April 29, 2024

வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சுனாங்க… குஷ்பு பற்றி மனமுருகிய சுந்தர் சி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் போன்ற இரு முன்னணி நடிகர்களுடனும், பல பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். குஷ்பூவின் மீது ரசிகர்களிடையே அதிகமான பாசம் இருந்ததால், அவருக்காக கோயில் கட்டிய காட்சிகளும் நடப்பெற்றன. மேலும், குஷ்பூ என்ற பெயர் இட்லியுடன் தொடர்புபடுத்தப்பட்டு பிரபலமானது. 80களின் கனவுக் கன்னியாக விளங்கியவர் குஷ்பூ.

மும்பையை சேர்ந்தவர் குஷ்பூ. ஆனால், வேகமாகவே தமிழைக் கற்றுக்கொண்டு அறிமுக படங்களிலேயே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியவர். அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறமைகளையும் பெற்றவர். இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்து, அரசியலில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பூ, மீண்டும் நடிப்பதில் சற்று கவனம் செலுத்தினார். அவர் ‘ராமபானம்’ படத்தில் நடித்திருந்தார், இதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், விஜய்யுடன் ‘வாரிசு’ படத்திலும் நடித்திருந்தாலும், அவரது காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து நீக்கப்பட்டன.

இதையடுத்து, இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, தனது மனைவி குஷ்பூ குறித்து பல விஷயங்களை மனம் திறந்து ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.அவர், குஷ்பூவுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது மருத்துவர் ஒருவர், நீங்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் மிகவும் மனம் உடைந்த குஷ்பூ கண்ணீர் விட்டு அழுதார்” என்றார்.

குஷ்பு என்னிடம் வந்து “நீங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார். அதன் பிறகு நாங்கள் அந்த சோகமான மனநிலையிலேயே வாழ்ந்து வந்த சமயத்தில் கடவுள் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது ஒரு பெண் குழந்தை மட்டுமல்ல, இரண்டு பெண் குழந்தைகள் தேவதைகள் போல பிறந்தனர் என உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News