Saturday, May 11, 2024

கொச்சி ஏர்போர்ட்டில் மகனுடன் தனியாக வந்த நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்தவர். கதாபாத்திரங்களில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவனுடன் ஆரம்பித்த “ரௌடி பிக்சர்ஸ்” எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த புதிய படங்களை தயாரித்தும், திறமையான புதிய கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பும் தருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா குழந்தையுடன் கொச்சி ஏர்போர்ட்டில் இன்றைய தினம் வந்ததை பார்க்க முடிந்தது. குழந்தையை தானே தூக்கிக் கொண்டு வந்த நயன்தாரா, காரில் ஏறிவிட்டு உடமைகளை பொறுப்பாக வாங்கி உள்ளே வைப்பதாக தற்போது வெளியாகியுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.

நயன்தாரா தனது குழந்தைகளுடன் பெரும்பாலும் சென்னையில் நடைபெறும் ஷூட்டிங்குகளில் ஈடுபட்டு வந்தது பல விமர்சனங்களையும் கேள்விகளையும் உண்டாக்கியது. எனினும், நயன்தாரா அவரது குழந்தைகளுடனான உறவை முக்கியமாக கொண்டு, சினிமாவிலும் சிறப்பாக நடித்துவருகிறார்.இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுடன் உள்ள நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News