விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம், சென்சார் சிக்கல்களின் காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறுதணிக்கை செயல்முறைகள் மற்றும் தேர்தல் சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாக, இந்த படம் தொடர்ந்து பல தடைகளையும் குழப்பங்களையும் சந்தித்தது.

இதற்கிடையில், முழு திரைப்படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி, திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த சட்டவிரோத வெளியீட்டில் தொடர்புடைய சிலரை காவல்துறை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில், படத்தின் படத்தொகுப்பாளரான பிரதீப் ராகவ் மீது திரைப்படத் படத்தொகுப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக பிரதீப் ராகவ் நேரடி காரணம் அல்ல என்றாலும், அவரது கவனக்குறைவு இதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சங்க விதிகளை மீறி, உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளர்களாக பணியமர்த்தியதும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading