பாடகி தீ-யின் ‘வரி வரி’ என்ற புதிய ஆல்பம் பாடல்!

பாடகி தீ, ‘என்ஜாய் என்ஜாமி’ என்ற பண்பாட்டு பாடலின் மூலம் உலகளவில் மிகப்பெரிய புகழைப் பெற்றார். இந்த பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, அதன் வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் தன்மையால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த பாடல் இந்திய சுயாதீன இசையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதுடன், தீயை உலக இசை உலகில் தனித்துவம் பெற்றார்.

அவரது கலைத்திறன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய விருதுகளை வென்றுள்ள அவர், சமகால இசை உலகில் முன்னணி கலைஞராக திகழ்கிறார். மேலும், ‘I Wear My Roots Like A Medal’ மற்றும் ‘Can’t You Stay A Little Longer’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் தனது கலை வெளிப்பாட்டை தொடர்ந்து வெளிபடுத்தி வருகிறார். இந்த பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் புதுமையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது திறமையை வெளிப்படுத்துகின்றன.

தற்போது, தனது சமீபத்திய இன்டிபெண்டன்ட் பாடலான ‘வரி வரி’ வெளியீட்டை முன்னிட்டு தீ கொழும்பு சென்றுள்ளார். அங்கு நாளை இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இது அவரது வளர்ந்து வரும் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகவும், அவரது கலைப் பயணம் தொடங்கிய இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் சிறப்பான தருணமாகவும் அமைகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading