தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா, தனது நீண்ட கால திரைப்பட பயணத்தில் தற்போது நூறாவது படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ‘கிங் 100’ என இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தை இயக்கிய ரா.கார்த்திக், இந்த முக்கியமான திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவுக்கு நெருக்கமான நட்பு கொண்ட நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நாகார்ஜுனா இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் நடிகை தபு நடித்துள்ள படங்கள் பத்துக்கும் குறைவானவை தான். இதில் நாகார்ஜுனாவுடன் இணைந்து அவர் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சுமார் 28 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை என்றாலும், இவர்களுக்கிடையிலான நட்பு இன்றளவும் எந்தவித மாற்றமுமின்றி தொடர்கிறது.
இந்த சூழ்நிலையில், நாகார்ஜுனா தனது நூறாவது படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிந்ததும், அந்த திரைப்படத்தில் தானும் இடம்பெற வேண்டும் என்று தபு அவரிடம் அன்புடன் கேட்டுக்கொண்டதாகவும், அந்த கோரிக்கையை மறுக்க முடியவில்லை என்றும் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். இதனால், தனது முக்கியமான நூறாவது படத்தில் தபுவும் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
