நவின் பாலியின் சர்வம் மாயா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிலீஸூக்கு தயாராகும் பேபி கேர்ள் திரைப்படம்!

மலையாள திரையுலகில் இளம் நடிகர் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்வம் மாயா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாரர், செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்துடன் உருவான இந்த படம், வசூலில் பெரிய சாதனை படைத்து 100 கோடி ரூபாய் இலக்கையும் எட்டியுள்ளது. இந்த வெற்றி, மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்கள் இல்லாமல் தவித்து வந்த நிவின் பாலிக்கு, சர்வம் மாயா திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய நிம்மதியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதற்கு முன்பு, அவரது படங்கள் எதிர்பார்த்த வியாபாரத்தை செய்யாத காரணத்தால், ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக இருந்த பேபி கேர்ள் திரைப்படம் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சர்வம் மாயா படத்தின் வெற்றியை தொடர்ந்து, பேபி கேர்ள் படத்தை வெளியிடும் பணிகளை படக்குழு மீண்டும் தொடங்கியுள்ளது. விரைவில் படம் வெளியாகும் என்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றையும் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளராக, குறிப்பாக ஆண் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், பிப்ரவரி மாத இறுதிக்குள் பேபி கேர்ள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading