தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக ‘பராசக்தி’… இது என் 100வது திரைப்படம் – ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டை முன்னிட்டு, பல இடங்களில் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே உருவான எதிர்பார்ப்பு, வெளியீட்டின் போது மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

1960-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கதைக்களம், நடிகர்களின் நடிப்பு மற்றும் இசை ஆகியவை படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் இன்று உலகளாவிய வெளியீட்டை பெற்றதை ஒட்டி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நீண்ட காலத்திற்கு பிறகு, நமது தாய்மொழியை போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக ‘பராசக்தி’ — இது என் 100வது திரைப்படம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading