Tuesday, May 7, 2024

அமிதாப் பச்சன்க்கு அப்புறம் இங்க நான் தான்…புகழ்ந்து பேசிய கங்கனா ரனவாத்… கலாய்க்கும் நெட்டிசன்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.

காரணம் அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு மழை பொழிகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்று பேசினார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News