Wednesday, May 8, 2024

விஜய்க்கு தவிர வேற யாருக்கும் அந்த தைரியம் இல்லை… சமுத்திரக்கனி அதிரடி பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி பேசியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலுக்கு வந்திருக்கும் தம்பி விஜய்க்கு எனது ஆதரவு எப்போதுமே உண்டு என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

200 கோடி ரூபாய்வரை ஒரு படத்துக்கு சம்பாதிக்கக்கூடிய அவர் அரசியலுக்கு வருவதால் நடிப்பதை நிறுத்துவதாக கூறியிருக்கிறார். எவ்வளவு பெரிய தைரியம் இதற்கு வேண்டும் என யோசிக்க வேண்டும் என்றுள்ளார்.

யாருக்கும் இப்படியொரு தைரியம் இல்லை.தெலுங்கில் நான் பவன் கல்யாணுடன் பணியாற்றியிருக்கிறேன். அவரும் அரசியலில்தான் இருக்கிறார். ஆனால் அவர்கூட நடிப்பதை முழுதாக விட்டுவிடவில்லை. கையில் இப்போது மூன்று படங்கள் வைத்திருக்கிறார்.தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் நடிப்பேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார் பவன் .

இவ்வாறு தமிழ்நாட்டில் நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசியலிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நடிப்பதை விட்டுவிடுவதாக ஒருபோதும் சொல்லியது கிடையாது. எனவே அரசியலுக்கு வருவதால் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று கூறியிருக்கும் விஜய்க்கு எனது சல்யூட் என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News