Tuesday, April 30, 2024

கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.பல ஆண்டுகளாக நிதிச் சிக்கல்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகள், வங்கி கடனுதவி மற்றும் பல நடிகர்களின் நன்கொடைகள் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நடிகர் நெப்போலியன் இந்தப் பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க, அமைச்சர் உதயநிதி நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஒரு கோடி ரூபாய் காசோலையை வழங்கினார். அடுத்து, சங்கத்தின் நலச்செயல் அமைப்பின் உறுப்பினரான கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதேபோல, விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடையும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கியதாக நடிகர் சங்கம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், 2000-2006 காலப்பகுதியில் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய நெப்போலியன் சங்கக் கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்புநிதி வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News