Thursday, May 9, 2024

இவங்க ரெண்டு பேரும் இல்லாதது எனக்கு கை உடைஞ்ச மாதிரி இருக்கு… ஃபீல் செய்த சுந்தர் சி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி கவுண்டமணி முதல் யோகிபாபு வரை என அனைத்து நகைச்சுவை நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய சுந்தர் சி அருணாச்சலம் படத்தில் செந்திலை மட்டுமே வைத்து காமெடி காட்சிகளில் அசத்தியிருப்பார்.

இப்படி விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு என பல நகைச்சுவை நடிகர்கள் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. தொடர்ந்து அந்த படத்தின் புரமோஷனுக்காக சுந்தர் சி சமீபத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

அதில் ஒரு பேட்டியில், வின்னர் படத்தில் விவேக்-ஐ தான் வடிவேலுக்கு பதிலாக நடிக்க வைக்க ப்ளான் செய்தேன்.ஆனால் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக கடைசி நேரத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதாவது அவருக்கும் எனக்கும் அவருக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகள் இருவரும் இணையாமல் இருந்தோம்.

பின்னர் அரண்மனை 3 படத்தில் இணைந்தார் விவேக். இப்படத்தை குஜராத் பக்கத்தில் ஒரு கிராமத்தில் எடுத்துக் கொண்டிருந்தோம் அங்கேயும் அவர் தினமும் வாக்கிங் செல்வார்.கடைசியாக டப்பிங் பேசி விட்டு சென்ற அவர், ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிடுச்சு மன்டே வந்து பேசுறேன்னு சொல்லவிட்டு சென்றவர் திரும்பவில்லை,அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு ரொம்பவே மனது உடைந்துவிட்டது. விவேக் சார், மனோபாலா சார் எல்லாம் இல்லாதது ஒரு கை உடைஞ்சு போன மாதிரி இருக்கு எனக்கு என சுந்தர் சி ரொம்பவே என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News