Monday, April 29, 2024

அந்த படத்தோடு எல்லாம் போச்சு… படம் பண்ணவே தோணல – சமுத்திரக்கனி உருக்கமான பேச்சு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராமம் ராகவம் படம் தன்ராஜ் இயக்கத்திலும் சமுத்திரக்கனி நடிப்பிலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சமுத்திரக்கனி பேசுகையில், அப்பா என்ற வார்த்தையை கேட்டாலே என்னுள் உணர்ச்சிபூர்வமான மாற்றம் ஏற்படும். இதுவரை பல படங்களில் அப்பாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாகவே நடித்துள்ளேன்.

10 படங்களில் அப்பாவாக நடித்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அப்பாவின் கதாபாத்திரத்தில் ஒருபோதும் நடிக்கக்கூடாது என்று நினைத்ததில்லை. அப்பா-மகன் உறவு புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

‘ராமம் ராகவம்’ படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். ஏனெனில், சிறிய படங்களை எடுத்து, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக போராட வேண்டியுள்ளது. ‘அப்பா’ என்ற படத்தை எடுத்தேன். அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து இன்றுவரை எந்தக் கணக்கும் எனக்கு வரவில்லை.இதுதான் தற்போதைய சூழல்.

அதன் பிறகு படம் எடுக்கும் ஆர்வமே எனக்கு இல்லை. ஆனால் அன்புடன் படத்தை எடுத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.அதற்கான வழியும் தெரியவில்லை என ஆதங்கத்துடன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News