பிக்பாஸ் தமிழ் 10வது சீசனில் ஜாய் கிரிசில்டா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். தனது குழந்தை ராகா மிகவும் சிறியவராக இருப்பதால், அவரை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சரியாகத் தோன்றவில்லை என்றும், அதனால் கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைப் பொறுத்தவரை தனது குழந்தையே முதன்மையான முன்னுரிமை என்றும் ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
Add a Comment
