சிறுவயதில் நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்து ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார். 15 வயதில், தன்னைவிட வயதில் மூத்த சிலருடன் பழகியதாகவும், ஒருமுறை அவர்களுடன் சென்றபோது, அவர்கள் ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், சிறுவயதில் தன்னுடன் பழகியவர்கள் செய்த அந்த சம்பவத்தை இன்றுவரை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
Add a Comment
