‘லெனின்’ இயக்குநருடன் இணையவுள்ளாரா தனுஷ்?… உலாவும் புது தகவல்!

தெலுங்கு திரையுலகில் சமீபத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற ‘லெனின்’ திரைப்படத்தின் இயக்குநர் முரளி கிஷோர் அப்புரு, தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது புதிய படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு ரசிகர்களிடமும் தனக்கென வலுவான இடத்தை உருவாக்கியுள்ள தனுஷ், வெங்கி அட்லூரி மற்றும் சேகர் கம்முலா இயக்கிய படங்கள் மூலம் அங்கு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றார். அந்த வெற்றிகளைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு இயக்குநருடன் இணையும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், முரளி கிஷோர் அப்புரு சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்து புதிய கதையை விவரித்ததாகவும், அந்தக் கதைக்கு தனுஷ் சாதகமான பதில் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading