முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட இயக்குனர் பாக்யராஜின் உடல்!

தமிழ் திரையுலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்று அனைவராலும் போற்றப்பட்ட மூத்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன் 27) காலமானார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை அவரது இல்லத்திலிருந்து உடல் இறுதி ஊர்வலத்திற்காக வெளியே கொண்டு வரப்பட்டபோது, தமிழக காவல்துறையினர் அரசு மரியாதை செலுத்தினர். அவரது உடலை வீட்டிலிருந்து இறுதி ஊர்வல வாகனம் வரை நடிகர்கள் பார்த்திபன் மற்றும் சரத்குமார் தோளில் சுமந்து வந்தனர். காலை 9 மணியளவில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி இறுதி மரியாதை செய்தனர்.

பின்னர் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading