நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தில் நடித்தார். இவர் தமிழ் மக்களிடையே பிரபலமானவர், குறிப்பாக ‘குக் வித் கோமாளி 5’ ரியாலிட்டி ஷோவின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் ஷாலின் சோயா அளித்த பேட்டியில், காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அவர் கூறியது: “எனக்கு எல்லாம் கல்யாணம் ஆகாது. என்னை யாரும் கல்யாணம் பண்ணப்போகிறார்களோ? நான் காதலுக்கும், கல்யாண வாழ்க்கைக்கும் ஏற்றவராக யாரும் கிடையாது. கல்யாணம் செய்யும்போது அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
எனது முழு கவனம் தற்போது சினிமாவிலும், என் தொழிலில் மட்டுமே உள்ளது. கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவும், எந்த ஐடியாவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
