”காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”… ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு மறுப்பு தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினி அறிக்கை!

சமீபத்தில் நடிகர் விஜய்யின் ‘தவெக’ கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது, அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கிய காரணம் குறித்து பேசியிருந்தார். அதில், ‘நடிகர் ரஜினி திமுக.,வின் மிரட்டலுக்கு பயந்துதான் அரசியல் பயணத்தை கைவிட்டார். 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”

வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!

என கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading