‘பராசக்தி’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய திரைப்படம் ‘சேயோன்’. இந்த திரைப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூர் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸை பார்வையிட்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சுற்றுலாவில் தனது மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் சிவகார்த்திகேயன் குடும்பமாக சென்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த தாய் கிழவி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
