Wednesday, May 8, 2024

பைசன் பயோபிக் படம் இல்லையா? நெல்லையில் நடக்கபோகும் 60 நாள் படப்பிடிப்பு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரமனின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமின் மூன்றாவது படமாக பைசன் உருவாக இருக்கிறது. இப்படத்தின் 60 நாட்களுக்கான சூட்டிங் நெல்லையில் தொடர்ந்து நடக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டாவது நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பைசன் படத்தில் கபடியை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தொடர்ந்து கபடி பயிற்சி மேற்கொண்ட துருவ் விக்ரம், கபடி வீரராக இந்த படத்தில் நடிக்க உள்ளார்.அதோபோல் இது எந்த ஒருவரின் பயோபிக் இல்லை என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியான படங்கள் பல மிகப்பெரிய ஹிட்டடித்தன அதோபோல் பைசன் படமும்‌ வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பைசன் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன் ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.

கடந்த ஆண்டில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து வாழை படத்தை அவர் இயக்கி வந்த சூழலில் தற்போது துருவ் விக்ரமுடன் அவர் இணைந்துள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவது உண்மைதான் என்று தனது பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ஆனால் படம் பயோ பிக் இல்லை என்றும் கற்பனை கதை தான் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் 60 நாட்கள் தொடர்ந்து திருநெல்வேலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட ஷெட்யூல் சென்னையில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News