Wednesday, May 8, 2024

ஆயிரத்தில் ஒருவன் போல் கதையை அஜித்திற்கு தயார் செய்த பில்லா பட இயக்குனர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் கூட்டணியில் வெளியான “பில்லா” மற்றும் “ஆரம்பம்” ஆகிய படங்கள் வணிகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றன. “பில்லா” படம் இன்றுவரை தமிழ் சினிமாவில் அஜித்தின் ஸ்டைலிஷான அன்டர்வோர்ல்ட் டானின் கதையை சொல்லும் கிளாசிக் படமாக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில், அஜித்துக்கு ஒரு வரலாற்று கதையை சொன்னதாகவும், இந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் கதையை போன்று உருவாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இது நடக்கவில்லை என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா ரசிகர்கள் அஜித்தை புதிய தோற்றங்களில் காண்பதை அதிகமாக விரும்பினாலும், வரலாற்றுப் பின்னணியில் இவரை காண அவர்கள் விரும்புவார்களா என்பதும், இது அவருக்கு பொருந்துமா என்பதும் எனக்கு தெளிவாக இல்லை என கூறியுள்ளார்.

மேலும், விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை த்ரிஷாவை முன்னணி பாத்திரங்களாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் எனவும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது என அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News