Thursday, October 10, 2024

என்ன ஒரு அழகான படம்… மெய்யழகன் படத்தை கண்டு மெய்சிலிர்த்து பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தியின் 27-வது படமான ‘மெய்யழகன்’ படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில், கார்த்தியுடன் முதன்முறையாக அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் ஆகியோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் “நான் போகிறேன்” மற்றும் “யாரோ இவன் யாரோ” என்ற இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியிருந்தார். இந்த பாடல்கள் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘மெய்யழகன்’ திரைப்படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தநிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘மெய்யழகன்’ படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், என்ன ஒரு அழகான படம்… நெருக்கமான நண்பரின் நீண்டகால அன்பைப் பெறுவது போல உணர்ந்தேன். மனதை கவரும் உணர்வுகளுடன் திரையரங்கில் இருந்து வெளியேறினேன்.” மேலும், “மனித உணர்வுகளை இவ்வளவு அழகாக திரையில் வெளிப்படுத்துவதில் நீங்கள் ஒரு மாஸ்டர்” என இயக்குனர் பிரேம் குமாரை பாராட்டினார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரும், சிறப்பான பணியாற்றிய படக்குழுவினரும் அவர் பாராட்டுகளை தெரிந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News