Friday, October 4, 2024

மெய்யழகன் படத்துல சில காட்சிகள்ல நீக்குனது சூர்யா அண்ணாக்கு பிடிக்கல… இயக்குனர் பிரேம்குமார் ஓபன் டாக்! #MEIYAZHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேம் குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அந்த திரைப்படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வெளிவந்தது. ஆனால், திரைப்படத்தை பார்த்த பலரும் படத்தின் நீளம் அதிகமாக உள்ளது, மேலும் சில தேவையற்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் நல்லதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.ஆனால், இயக்குநர் பிரேம் குமார் அத்தகைய காட்சிகளை குறைக்க சம்மதிக்கவில்லை, பிடிவாதமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில், அவர் 18 நிமிடக் காட்சிகளை திரைப்படத்திலிருந்து நீக்கியதற்கான காரணத்தையும் விளக்கமாக கூறியிருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் அந்தக் காட்சிகளை நீக்கியது பற்றிச் சரிவர விளக்கமளித்தார். “சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் காட்சிகளை குறைக்கக்கூடாது என்று கூறினார்கள். நம்ம பிள்ளையையே மூக்கு சரியில்லை, காது சரியில்லையென்று சொல்லலாமா? எதை எடுத்தோமோ அது அப்படியே இருக்கட்டும் என்று அவர்கள் கூறினர். நான் சூர்யாவிடம் சொன்ன போது அவர் கொஞ்சம் கோபம் கொண்டார். ஏன் நல்ல விஷயங்களை குறைக்க வேண்டும், எல்லோரும் ரசிக்கிறார்கள், அதனால் அவ்வாறே இருக்கட்டும் என்று கேட்டார்.

ஆனால், ரசிப்பவர்கள் ஒரு சதவீதம் என்றாலும், ரசிக்காதவர்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ததுதானே ரசிகர்கள். பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் இருவருமே ஆடியன்ஸாகவே கருதப்பட வேண்டும். எப்படியோ பிடிக்காதவர்களை விட்டு விட முடியாது. எனக்கு மனசை கல்லாக்கியே அந்தக் காட்சிகளை நீக்க வேண்டிய நிலை வந்தது. என்னைத் தவிர வேறு யாருக்கும் அதில் உடன்பாடு இல்லை. சூர்யா அண்ணன் கோபம் கொண்டிருப்பதாக இல்லை, ஆனால் காட்சிகளை நீக்கினது அவருக்கு பிடிக்கவில்லை,” என்று அவர் விளக்கமளித்தார்.

- Advertisement -

Read more

Local News