கணேஷ் கே பாபுவின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் புதிய படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக ரத்னகுமார் இணைந்துள்ளார். இவர், மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கியவர்.

அதுமட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளராகவும் அவருடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மாஸ்டர் மற்றும் லியோ படங்களில் அவர் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.இன்றைய அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.