Thursday, October 3, 2024

உருவாகிறது நடிகர் கார்த்தி மாரி செல்வராஜ் கூட்டணி… விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்த தயாரிப்பாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது, அவர் சர்தார் – 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மாரி செல்வராஜ், வாழை என்ற திரைப்படத்தின் வெற்றியின் பிறகு, நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்குப் பின், நடிகர் தனுஷை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளார். இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.

இந்நிலையில், நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இந்த படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News