‘இதயம் முரளி’ திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில், “‘இதயம் முரளி’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்ததும் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், மீண்டும் கல்லூரி நாட்களுக்கே திரும்பிச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மாளவிகா மோகனன், 2013-ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ‘பட்டம் போலே’ மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘மாறன்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது அவர், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
—
