வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ !

காவ்யா புரொடக்ஷன் மற்றும் எஸ்2 மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’. இந்தப் படத்தை பி. மஞ்சுநாத் தயாரிக்க, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், அஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். கே.ஆர். செந்தில்நாதன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அஸ்மிதா பேசுகையில், ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். படத்தின் தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை நடித்திராத ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருப்பதாகவும் பகிர்ந்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் பேசும்போது, ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்குப் பிறகு நல்ல கதைக்காக காத்திருந்ததாகவும், அப்போது இந்தக் கதை தன்னை அணுகியதாகவும் கூறினார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி தனது கருத்தில், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் கடினமான பயணம் என்றும், ஒரு கதையை உருவாக்கும் நிலையிலிருந்தே பல்வேறு சவால்கள் தொடங்கிவிடுகின்றன என்றும் கூறினார். சிறந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து மாற்றங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுவது இயல்பான விஷயமாகும் என்றும், திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல எதிர்பாராத சவால்கள் வந்தாலும், அவற்றை அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து எந்தத் தடையும் இல்லாமல் படம் நிறைவடைய வேண்டும் என்பதே தனது மனமார்ந்த விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading