மீண்டும் இணையும் ‘ஜெய் பீம்’ பட கூட்டணி… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

கேஜிஎஃப், காந்தாரா, சலார் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தற்போது முதல் முறையாக தமிழ் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறது. அந்த நிறுவனத்தின் புதிய தமிழ் படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கிறார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். ஏற்கனவே ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய அவர், இந்தப் படத்திலும் மீண்டும் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் பூஜை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கன்னடத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை வழங்கிய ஹொம்பாலே பிலிம்ஸ், இந்தப் படத்தின் மூலம் தமிழிலும் தனது தயாரிப்பு பயணத்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரைப்படங்களில் அதிகளவில் முதலீடு செய்து வரும் நிலையில், தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கு முன்பே தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்திருந்த சூர்யா, தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படத்திலும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading