இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் விதமாக ‘ஜெய் ஹோ – ஏ ட்ரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்’ என்ற தலைப்பில் அட்டாரி – வாகா எல்லையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவினர் உடன் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினார். இந்த இடத்தில் ரஹ்மான் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். குறிப்பாக அவரது இசையில் வெளியான ‛வந்தே மாதரம்’ ஆல்பம் மீண்டும் நேரலையில் பாடப்பட்டபோது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
Add a Comment
