புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள படம் ‛பெத்தி’. தனது கிராமத்திற்கு அடையாளம் கிடைக்க போராடும் இளைஞனின் கதையாக, விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் வசூல் நன்றாக உள்ளது. முதல் நாளில் இப்படம் உலகளவில் 135 கோடியே 36 லட்ச ரூபாய் வசூலித்தது. தொடர்ந்து நான்கு நாட்களில் 292 கோடியே 50 லட்ச ரூபாய் வசூலித்த நிலையில் 5 நாளில் இப்படம் 300 கோடியே 15 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 5வது நாளிலேயே பெத்தி படம் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. இன்னும் ரூ.100 கோடி வசூலை கடக்கும்பட்சத்தில் படம் லாபக் கணக்கை துவங்கிவிடும்.
Add a Comment
