அதிரடி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட திரைக்கலைஞரான பாசில் ஜோசஃப் தன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். அதிரடி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அருண் அனிருதன் இயக்க, நடிகர்கள் டொவினோ தாமஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கல்லூரி பின்னணியில் உருவான இதில் நாயகனாக பாசில் ஜோசஃப் நடிக்க, வில்லனாக டொவினோ நடித்துள்ளார்.அண்மையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இதுவரை ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற மே 22 ஆம் தேதி தமிழிலும் இப்படம் திரைக்கு வருகிறது.
Add a Comment
