நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்து ‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ எனும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றுகிறார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி, இது மதுரை பின்னணியில் அமைந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சென்னை வந்துள்ளார். ‘சேயோன்’ திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளதால், அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடவே அவர் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிச்சொற்கள்: Sivakarthikeyan, Seyon Movie, Kamal Haasan, Raaj Kamal Films International, Santhosh Narayanan, Sivakumar Murugesan, Bhagya Sri Borse, Tamil Cinema, Kollywood Updates, New Movie, Tamil Cinema News, Tamil News, Tamil Movies, Tamil New Movies, Cinema News, Cinema News Tamil, Kollywood, Kollywood Tamil News
—
