இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி துரந்தர் 2 படம் பார்த்துவிட்டு தனது ரிவியூவை எழுதியுள்ளார். சமூக வலைத்தளத்தில் கோலி பதிவிட்டுள்ளதாவது:துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படத்தை பார்த்தேன். இந்தியாவில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ட இந்த படம் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தியது. சுமார் 4 மணி நேரம் நான் ஒரு கணமும் கவனம் சிதறாமல் பார்த்தேன் ஆதித்யா தார் உங்கள் திறமை மற்றும் உறுதி இந்த படைப்பில் தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் ஒரு ஜீனியஸ். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ரன்வீர் சிங் இந்த படத்திற்கு பிறகு நீங்கள் முற்றிலும் வேறொரு நிலையை அடைந்துள்ளீர்கள். உங்கள் நடிப்பு மிகச் சிறந்தது. உண்மையிலேயே வாவ்,” என்று பதிவிட்டுள்ளார்.
Add a Comment
