நடிகர் சல்மான் கான் இறுதியாக நடித்த “சிக்கந்தர்” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கான் நடிக்கும் அவரது திரைப்படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை.
அதற்கு அவரது கதை மற்றும் இயக்குநர் தேர்வு காரணமாக உள்ளது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், படம் வெளியீடுக்கு முன்னதாக கவனம் ஈர்த்தாலும், வெளியான பிறகு அவரை வைத்து ஷூட்டிங் செய்ய இயலாது என இயக்குநர்கள் குறைகூறி வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என சல்மான் கான் தெரிவித்தார்.
