ஆடை குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அன்னா ராஜன்!

மலையாளத் திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாக திகழும் அன்னா ராஜன், அண்மையில் கேரளாவில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த சேலை மிகுந்த கவர்ச்சியாக இருந்ததுடன் கோவில் வளாகத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வழிபாட்டு தலத்தில் இதெல்லாம் ஏற்றதல்ல என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அன்னா ராஜன் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி, நிகழ்ந்தவை அனைத்தும் தவறுதலாக ஏற்பட்டவை என்று விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும்போது தனது உடைத் தேர்வில் அன்னா ராஜன் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. கவர்ச்சியை வெளிப்படுத்தாத ஆடைகளையே அவர் தற்போது விரும்பி அணிகிறார். மேலும், உடையைச் சரிசெய்வது போன்ற செயல்களை கூட பொதுமக்கள் அல்லது செல்போன்கள் காணாத இடங்களில் மட்டுமே மேற்கொள்கிறார். எந்தவிதமான எதிர்மறை கருத்துகளும் எழாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார்.

அதேசமயம் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், வழக்கம்போலவே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தில் அன்னா ராஜன் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading